Saturday, February 16, 2013

நித்தமும் உன் நினைவில் !!!

உதிர்த்து போகும் என்று தெரிந்தே
நித்தமும்  மலர்கிறேன் உன் நினைவால் !!!




Thursday, February 14, 2013

விதியின் பிடியில் வினோதினி !!!

மலர வேண்டிய பூக்களுக்கு
மரணமே பரிசாக !!!

பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி
பார்த்த காலங்கள் கடந்துவிட்டது
அகிம்சம் வளர்த்த பூமியில்
அமிலங்களின் ராஜ்யம் ..

பற்றாகுறை சட்டத்தில்  இல்லை
பார்க்கும் கண்களில் ..

பொறுமையின் கூட்டிற்குள் குடிகொண்ட
போராட்டங்கள் ..
மெல்லிய மனதிற்குள்
மரணவாசலில் வீரவசனங்கள் !!!

எங்களின்  மனங்களில் மலர்ந்து
மடிந்து போன  மாதுவே...
உன் மரணமாவது விதைக்குமா ?!!!
மனிதர்களின் மனங்களில் மாற்றங்களை !!!