Thursday, February 14, 2013

விதியின் பிடியில் வினோதினி !!!

மலர வேண்டிய பூக்களுக்கு
மரணமே பரிசாக !!!

பூக்களுக்கு தண்ணீர் ஊற்றி
பார்த்த காலங்கள் கடந்துவிட்டது
அகிம்சம் வளர்த்த பூமியில்
அமிலங்களின் ராஜ்யம் ..

பற்றாகுறை சட்டத்தில்  இல்லை
பார்க்கும் கண்களில் ..

பொறுமையின் கூட்டிற்குள் குடிகொண்ட
போராட்டங்கள் ..
மெல்லிய மனதிற்குள்
மரணவாசலில் வீரவசனங்கள் !!!

எங்களின்  மனங்களில் மலர்ந்து
மடிந்து போன  மாதுவே...
உன் மரணமாவது விதைக்குமா ?!!!
மனிதர்களின் மனங்களில் மாற்றங்களை !!!





Wednesday, November 28, 2012

எழில்

என் தாய்மொழியும்  உன் முன் மன்றாடி நின்றது
உன் அழகை வர்ணிக்க வார்த்தைகள் கிட்டாமல் ...

Tuesday, September 18, 2012

மௌனம்

தனிமையின் ஆழத்தை உணர்ந்துகொண்டேன் உன் மௌனத்தில் ..



Miss U

I Will Type message for U..
But I wont Sent U..

I Will Dial Ur Number ..
But I wont call U..

I am Feeling Lonely in ur absence..
But I wont tell U..

I just want u to feel i am hardly Missing U...



மௌனம்

நேசிக்கும் இதயத்தை தண்டிக்கும் ஓர் மொழி ....

- மௌனம்

தனிமை...

தனிமையை உணரும் என் இதயத்திற்கு ...
அதை உணர்த்திட வார்த்தைகள் கிடைக்கவில்லை ..


Saturday, September 15, 2012

என் அன்பே

உன் அருகில் அமர்நது உன்முகம் பார்த்துக்கொண்டிருந்தால் போதும்
என் துயரங்கள் அனைத்தும் தொலைந்தே போகும் ...


Sunday, August 5, 2012

என் கண்ணீர்...

என் கண்ணீர்த்துளிகளால் எழுதிய கவிதை இது ....
படித்தால் புரியாது  ...
உணர்ந்துகொள் ...  

Sunday, March 25, 2012

மனித வாழ்வு !!!

மனிதனுக்கு புவியறையை விட ....
       கருவறையும் கல்லறையுமே நிசப்தம் ....

For Women's Day



Saturday, March 3, 2012

நட்பு ...

சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...




கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...

தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...

தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...

ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...

என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!

பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!! 

ஓர் பயணம் ...

கால ஓடையில் ...
    நட்பெனும் ஓடத்தில் பயணிப்போம் நாம் ...
      நம் வாழ்க்கை பயணம் முடியும் வரை !!!