Saturday, March 3, 2012

நட்பு ...

சங்கடங்கள் பல வந்தாலும்
சளைக்காமல் நான் ஏற்பேன்
சாய்ந்துகொள்ள உன் தோள் இருந்தால் ...




கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்காமல் நான் இருப்பேன்
கண்ணீர் துடைக்க உன் விரல் இருந்தால் ...

தடைகள் பல வந்தாலும்
தளராமல் உடைதெரிவேன்
தாங்கிக்கொள்ள நீ இருந்தால் ...

தடுக்கி வாழ்வில் விழுந்தாலும்
தயங்காமல் எழுந்திடுவேன்
தூக்கிவிட உன் கரம் இருந்தால் ...

ஆதியும் அந்தமுமாய்
எனக்கென நீ இருக்க ...

என்றும் என் நெஞ்சில்
நீ இருப்பாய் - நம் நட்போடு !!!

பிரிவினை விதைக்கும்
விதியினை வெல்லட்டும் நம் நட்பு !!! 

2 comments: